Thursday, January 03, 2008

திருப்பாவை #19

ஸ்ரீ:

ஆண்டாள் திருக்கல்யாணம்


குத்து விளக்கெரிய கோட்டுக்காற் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.
........ (19)



பொருள்: சுற்றிலும் குத்து விளக்குகள் ஒளி சிதற , யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய சப்ர மஞ்ச கட்டிலில், மிருதுவான, வெண்மையான, குளிர்ச்சியான, வாசனை மிக்க, அழகான பஞ்சு மெத்தையில் வாசனை மிகுந்த கொத்து கொத்தான மலர்களை சூடிய நப்பின்னை பிராட்டியை அனைத்துக் கொண்டு உறங்கும் அகலகில்லேனிறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பா! மணிவண்ணா! கண்ணா! வாய் திறந்து பேசு.

மை எழுதிய கண்களையுடைய நப்பின்னையே! உன் கணவனின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று, உறங்கும் உன் கணவனை எழுப்ப உனக்கு மனமில்லையா? அவரை நீ சிறிது நேரம் கூட பிரிய மாட்டாயா? இது உனக்கு தகுதியன்று. அவ்வளவு தான் சொல்வோம். எங்கள் கோரிக்கையை ஏற்று கண்ணனை எழுப்பு அம்மா!


நப்பின்னை பிராட்டியாருக்காக கண்ணன் யாவராலும் அடக்க முடியாத ஏழு காளைகளை அடக்கி அவரைக் கைப் பிடித்தார் என்பது புராண வரலாறு.

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home