Friday, December 21, 2007

திருப்பாவை # 5

ஸ்ரீ:










மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் வந்து தோன்றும் அணி விளககை
தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றளவும்
தீயினால் தூசாகும்! செப்பேலோ ரெம்பாவாய். ..........(5)


பொருள்:

கண்ணனது பெயர் சிறப்பு :
பாற் கடலில் பள்ளி கொண்ட பரமன் கண்ணன், நிலைத்த தன்மையுடைய மதுராவில் தோன்றிய மாயன், தூய்மையும் பெருமையும் உடைய யமுனைக் கரையில் ராச லீலைகள் புரிந்தவன். ஆயர் குலத்தினில் வந்துதித்த அழகிய விளக்கு. தன்னைப் பெற்ற தாயை எனன பேறு பெற்றாள் இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்று உலகத்தோரெல்லாம் புகழச் செய்த தாமோதரன்.

(என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தையெய்துவித்த இருடீகேசா! முலையுணாயே என்பது பெரியாழ்வாரின் பாசுரம்)
அந்த பெருமாளை நாம் தூய மனதுடன் நல்ல மலர் தூவி வணங்குவோம்; வாயினால் அயர்விலா அமரர்கள் ஆதிக் கொழுந்தே, ஆழிப் படையந்தணணே, உய்ய்க் கொள்கின்ற நாதனே என்று அவனதுப் புகழைப் பாடுவோம்; மனதினால் அவனது தன்மையை நினைப்போம், இவ்வாறு காலையில் மார்கழி நீராடி கண்ணனை பூசை செய்தால் நாம் முன்பு செய்த பிழைகளும், இனி மேல் வரும் பொருட்டிருக்கும் பிழைகளும் நெருப்பில் இட்ட தூசு போல் அழிந்து விடும் ஆகையால் அவனது புகழைப் பேசுவாமாக!

Labels: , ,

3 Comments:

Blogger enRenRum-anbudan.BALA said...

நல்ல பதிவு, வாழ்க உங்கள் சேவை !

எனது திருப்பாவை விளக்கப் பதிவுகளை சமயம் கிடைக்கும்போது வாசிக்கவும்.

அவற்றை "திருப்பாவை" என்ற லேபிளின் கீழ் காணலாம்.

எ.அ.பாலா

5:19 AM  
Blogger S.Muruganandam said...

நன்றி பாலா அவ்ர்களே தங்கள் விளக்கங்களையும் படங்களையும் கண்டேன். இனைப்பும் கொடுத்துள்ளேன்.

8:03 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

நன்றி Kailashi அவ்ர்களே

5:32 AM  

Post a Comment

<< Home